×

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் 4 பேரின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.20 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.20 லட்சத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு வீரர்களின் வாரிசுதாரர்களை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்ததோடு, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கினார். தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பொதுத்துறை செயலாளர் ஜகந்நாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், சோளம்பட்டி கிராமத்தைச் சார்ந்த மறைந்த படைவீரர் பாலமுருகன்  தாய் குருவம்மாள், கிருஷ்ணகிரி மாவட்டம், ராகிமானப்பள்ளி கிராமத்தைச் சார்ந்த மறைந்த படைவீரர் சந்தோஷ் தாய் சித்ரா, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த மறைந்த படை அலுவலர் ஆனந்த் மனைவி பிரியங்கா நாயர், திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை கிராமத்தைச் சார்ந்த மறைந்த படைவீரர் சபரிநாதன் தாய் மனோன்மணி ஆகிய நான்கு வாரிசுதாரர்கள்  முதல்வர் மு.க. ஸ்டாலினிடமிருந்து நிவாரண நிதியைப் பெற்றுக் கொண்டார்கள்.

Tags : Chief Minister ,MK Stalin , Martyrdom, soldier, Chief MK Stalin
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...