×

தடுப்பூசி பற்றாக்குறை உண்மை சொல்லுங்கள்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘தடுப்பூசி பற்றாக்குறை குறித்த உண்மையை நாட்டு மக்களுக்கு ஒன்றிய அரசு சொல்ல வேண்டும்’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறி உள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது உண்மை. ஆனால், தடுப்பூசி உற்பத்தித் திறன் மிகைப்படுத்தப்படுகிறது. தடுப்பூசி இறக்குமதி மர்மமாகவே உள்ளது. நடப்பாண்டு டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்பது, மத்திய அரசின் வெற்றுப் பெருமை அறிவிப்பு. தடுப்பூசி குறித்த உண்மைகளையும், டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை குறித்தும் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.


Tags : P. Chidambaram , Vaccine shortage Tell the truth: P. Chidambaram insists
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...