×

பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் கொள்ளை முயற்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை அருகே ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர். திருநாவுக்கரசு நேற்று, சென்னையில் அலுவலக வேலைக்காக சென்றார். காலை சுமார் 11 மணியளவில், அவரது வீட்டின் வெளியே 3 பேர், கையில் பையுடன் தாவி குதித்து உள்ளே சென்றனர். இதனை வீட்டில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமரா மூலம் கையில் வைத்துள்ள செல்போனில் திருநாவுக்கரசு பார்த்தார். உடனே அவர், அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த நேரத்தில் எதிர் வீட்டில் வசிப்பவர் வருவதை பார்த்ததும், மர்ம நபர்கள் உடனடியாக, தப்பி ஓடினர். அவர்களிடம் இருந்த பையில் இரும்பு ராடு, பயங்கர ஆயுதங்கள் இருந்ததாக, நேரில் பார்த்தவர்கள் கூறினர். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags : BSNL , BSNL employee attempted home robbery
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...