சென்னை: இணையதளம் மூலமாக தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் வழங்கும் பணி 17ம் தேதியுடன் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகள் குறைந்த காரணத்தால் நிறுத்தப்படுவதாக தகவல் தெரியவந்துள்ளது. தேவை என்றால் மாவட்ட மருந்து கிடங்களில் நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.