சென்னை: நீட் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆய்வுக்குழு அமைத்தது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதல்ல என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தால் மட்டுமே அதனை உச்சநீதிமன்றத்தில் அரசு தெரிவிக்க இயலும். நீட் தேர்வு தாக்கம் பற்றி ஆராய ஏ.கே.ராஜன் குழுவை தமிழக அரசு அமைத்ததற்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.