பழனி: பழனியில் கேரள பெண் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பழனியில் கேரள பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் விவகாரத்தில் புதிய திருப்பம் - கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளதாக திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. தெரிவித்துள்ளார். புகாரளித்த பெண்ணிடன் விசாரணை நடத்த தமிழக போலீசார் குழு, கேரளா சென்றுள்ளது. சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் இருவரும் நடமாடியதற்கான ஆதாரங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.