×

ஜல்லிக்கற்கள் பெயர்ந்ததால் அவதி சாலையை சீரமைக்க கோரிக்கை

வருசநாடு : கண்டமனூர் அருகே, ஜல்லிக்கற்கள் பெயர்ந்த இணைப்புச்சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்டமனூர் அருகே, கருப்புகோவில் முதல் எட்டப்பராஜபுரம் இணைப்பு சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். தினசரி டூவீலர்களில் செல்வோரின் டயர்களை ஜல்லிக்கற்கள் பதம் பார்க்கின்றன. இப்பகுதியில் விளையும் தக்காளி, மிளகாய், அவரை, எலுமிச்சை, வெங்காயம் உள்ளிட்ட விளைபொருட்களை வாகனங்களில் ஏற்றி சந்தைக்கு, உரிய நேரத்துக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

எனவே, சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கண்டமனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி கருப்பையா கூறுகையில், ‘தினமும் இந்த சாலை வழியாக செல்கிறோம். பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக்கற்கள் வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கின்றன. சாலையை சீரமைக்க பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Avadi Road , Varusanadu: Motorists have demanded that the link road near Kandamanur be repaired.
× RELATED ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது...