×

கண்ணமங்கலம் அருகே வெள்ளப் பெருக்கு: நாகநதியில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளியை மீட்ட கிராம மக்கள்

கண்ணமங்கலம்: தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி குளங்கள் நிரம்பி, ஆறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே உள்ள நாகநதியின் கரையிலிருந்து மறுபக்கம் உள்ள கீழ்பள்ளிப்பட்டு வழியாக பொதுமக்கள் ஆற்றில் நடந்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று பக்தா குமரேசன்(45) என்ற கூலித்தொழிலாளி ேவலைக்கு செல்வதற்காக ஆற்றை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது நிலைதடுமாறி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அதிர்ச்சியடைந்த அவர் ‘‘காப்பாத்துங்க, காப்பாத்துங்க’’ என கூச்சலிட்டுள்ளார். இதைப்பார்த்த கிராம மக்கள் உடனடியாக அவருக்கு கயிறு வீசினர். இதையடுத்து கயிற்றை பிடித்துக் கொண்ட அவரை கிராம மக்கள் போராடி உயிருடன் மீட்டனர்.


Tags : Kannamangalam ,Naganadi , Kannamangalam, flood
× RELATED மாணவியிடம் பாலியல் சில்மிஷம் விவசாயி மீது போக்சோ வழக்கு ஆரணி அருகே