மும்பை: பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் குடியிருப்பில் வசித்துவரும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அந்த கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தென்மும்பை அல்டாமவுண்ட் சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த குடியிருப்பில் இரு விங்குகள் உள்ளன. ஏ விங்கில் 5 பேருக்கு கொரோனா இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குடியிருப்பு வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, கட்டிடம் நுண் கட்டுப்பாட்டு பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பில் வசித்து வரும் மக்கள் யாரும் வெளியே வரவும், வெளியே இருந்து யாரும் உள்ளே செல்லக்கூடாது என்பதற்காகவும் கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சுனில் ஷெட்டியின் வீடு பி விங்கில் உள்ளது. அவருக்கோ அல்லது அவருடைய குடும்பத்தை சேர்ந்த யாருக்குமே கொரோனா பாதிப்பு இல்லை. ஆனாலும் கட்டிடம் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளதால் சுனில் ஷெட்டியும் அவருடைய குடும்பத்தினரும் வெளியே செல்ல முடியாது. 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதா என்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.