×

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் இருக்கக் கூடாது : நீதிபதிகள் அறிவுறுத்தல்!!

சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கையால் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் இருக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் இருக்கக் கூடாது என்று அறிவுரை வழங்கிய நிலையில், கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்துள்ளதால் டெங்கு பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

Tags : Corona , கொரோனா
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...