டெல்லி: மின்னல் தாக்கி உயிரிழந்த 68 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் கடந்த 2 நாட்களில் மின்னல் தாக்கி 68 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், கோட்டா, ஜலாவர், டோல்பூர் மாவட்டங்களில் நேற்று மின்னல் தாக்கியதில் 20 பேர் உயிரிழந்தனர். ராஜஸ்தானில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். உத்தராகண்டில் பெய்து வரும் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மத்தியப்பிரதேச மாநிலத்தில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்தனர்.