×

சீனாவில் கொட்டிதீர்த்த பலத்த மழையால் முக்கிய நதிகளில் அபாய அளவைத் தாண்டி கரைபுரளும் வெள்ளம்... அச்சத்தில் மக்கள்..!!

சிச்சுவான்: சீனாவில் கொட்டிதீர்த்த மிக பலத்த மழையால் அந்நாட்டில் தென்மேற்கு மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த சில நாட்களாக பெய்து வந்த பெருமழையால் சிச்சுவான், தோன்சுவான், தாங்சுவான் மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. 75க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் தனி தீவுகளாக மாற்றியிருக்கிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். தொடர்ந்து பாகே, யாங்ஷீ, ஜியாலிங் ஆகிய நதிகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி கரைபுரண்டு ஓடுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட கிராமவாசி டியூ ஜியங் குறிப்பிட்டதாவது, பல நாட்களாக பெய்து வந்த மழை நின்றுவிட்டது. ஆனால் வெள்ளம் நொடிக்கு நொடி அதிகரித்து வருகிறது.

சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பெருமழையால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது சிச்சுவான் பகுதிகளில் மழை குறைந்துள்ள போதும் வெள்ளத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு நகரங்களின் சாலைகளில் வெள்ள நீர் வியாபித்து இருப்பதால் வாகனங்கள் படகுகளை போல் நீந்தி செல்கின்றன. இதனிடையே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை சிச்சுவான் மாநில அரசு போர்க்கால அடிப்படையில் முடிக்கிவிட்டுள்ளது.


Tags : China , China, heavy rain, river, flood
× RELATED சொல்லிட்டாங்க…