×

அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவுள்ளேன்: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை: அரசியலுக்கு வரலாமா வேண்டாமா  என மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவுள்ளேன் என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க செல்லும் முன் ரஜினிகாந்தி பேட்டியளித்துள்ளார். மக்கள் மன்றத்தை தொடரலாமா? அதன் செயல்பாடுகள் என்ன என்பது குறித்தும் ஆலோசிக்கவுள்ளேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேனா என ரசிகர்களிடம் கேள்வி உள்ளதால் அது பற்றி ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags : Rajinikant , rajini
× RELATED திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம் வந்த ரஜினியால் பரபரப்பு