திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக பக்தர்கள் முன்பதிவு செய்த பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்தில் தரிசனம் செய்வதற்கான ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை வரும் 20ம் தேதி காலை 9 மணி முதல் https://tirupatibalaji.ap.gov.in/index.html என்ற இணையத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் இதனை பயன்படுத்தி ஆகஸ்ட் மாதத்தில் சுவாமியை தரிசனம் செய்யலாம்.