டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் மாநிலத்துக்கு அடிக்கடி வந்து மக்்்கள்ஆதரவை திரட்டி வருகிறார். டேராடூனில் நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘உத்தரகாண்டில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் மாதத்துக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இதை டெல்லியில் நாங்கள் அமல்படுத்தி இருக்கிறோம். அப்படி இருக்கும்போது. உத்தரகாண்டில் ஏன் அது சாத்தியமாகாது?’’ என்றார்.