லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 479 மண்டல பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, 17 மாவட்டங்களில் வன்முறைகள் அரங்கேறின. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
உன்னோவ் மாவட்ட வளர்ச்சி அதிகாரியாக உள்ளவர் திவ்யன்ஷு பட்டேல், ஐஏஎஸ் அதிகாரியான இவர் பாஜ.வுக்கு ஆதரவாக தேர்தல் முறைகேடு செய்ததாக தெரிகிறது. இதை பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ எடுத்தார். இதை பார்த்து ஆத்திரமடைந்த பட்டேல், அந்த பத்திரிகையாளரை அடித்து நொறுக்குகிறார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.