சென்னை: வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கடன் செலுத்தாத வாகன உரிமையாளர்களிடம் இருந்து வாகனங்களை கைப்பற்றுவது குறித்து தனிப்படை அமைத்து முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். வாகன உரிமையாளர்கள் வங்கி சாரா நிதி நிறுவனங்களால் வாட்டி வதைக்கபடுவது தொடர்வதாக தெரிகிறது. தமிழகத்தில் எழும் புகார்களை விசாரிக்க தனிப் பிரிவை அமைக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.