நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் பகுதியில் கோயில் கோபுரத்தில் இடி, மின்னல் தாக்கி சிலைகள் சேதமடைந்தது. ஈழமேச்வரமுடையர் கோயில் கோபுரத்தில் மின்னல் தாக்கி பார்வதி, பரமேஸ்வரர் உள்ளிட்ட சிலைகள் சேதமடைந்தது. மின்னல் தாக்கி கோயில் கோபுரத்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட புறாக்கள் இறந்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.