சென்னை: சிவசங்கர் பாபா மீது பதிந்த 3வது வழக்கை, போக்சோ சட்ட பிரிவின் கீழ் மாற்ற சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். 3வது வழக்கை, போக்சோ சட்ட பிரிவின் கீழ் மாற்றுவது குறித்து சட்ட வல்லுனர்களுடன் சிபிசிஐடி போலீசார் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக முன்னாள் மாணவிகள் 18 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர். சிவசங்கர் பாபா மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.