கடலூர்: கடலூரில் அரசு விதிகளை மீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்களின் வலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடலூர் மீன்பிடித் துறைமுகத்தில் விதிகளை மீறி சிலர் மீன்பிடிப்பதாக நேற்று மீனவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை அடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்த போது சிறிய அளவு கண்ணு பகுதியில் வலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.