சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் மக்கள் நீதி மய்யம் போராட்டம் நடத்தி வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சாலையில் அடுப்பு அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நடந்த போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.