சென்னை: சென்னையில் மேலும் ஒரு ஆசிரியர் மீது பாலியல் புகார் எழுந்திருக்கிறது. சென்னை மயிலாப்பூர் பெண்ணாத்தூர் சுப்ரமணிய ஐயர் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் ஆசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். 2004 - 2014 வரை 10 ஆண்டுகள் பி.எஸ். பள்ளியில் படித்த போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி புகார் அளித்துள்ளார். அப்போது ஆசிரியர்களாக இருந்த சிவகுமார், வெங்கட்ராமன், ஞானசேகரன் தவறாக நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.