×

ஒரே நாளில் மின்னல் தாக்கி 8 விவசாயி பலி: தெலங்கானாவில் சோகம்

திருமலை: தெலங்கானா மாநிலம், அடிலாபாத், நிர்மல் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை தனது நிலத்திற்கு லட்சுமணன் என்ற விவசாயி மாடுகளை மேய்க்க சென்றார். அப்போது, இடியுடன் மழை பெய்தது. திடீரென மின்னல் தாக்கியதில் லட்சுமணன் உடல் கருகி உயிரிழந்தார். மேலும், 2 மாடுகளும் உயிரிழந்தன. அதேபோல், 2 மாவட்டங்களிலும் நேற்று ஒரே நாளில் மட்டுமே இடி, மின்னல் தாக்கியதில் விவசாயிகள், விவசாய கூலி என 8 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தெலங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Telangana , Lightning, Kills, Telangana
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து