×

சுகாதார பணியாளர் பயிற்சி முகாம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அபி சத்திரம் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் சுகாதார பணியாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், வேல்முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை வரவேற்றார்.

இதில், தூய்மை தமிழகம் செயலி பயன்படுத்தும் முறைகள், கிராமங்களில் நூண்ணுயிர் உரம் தயாரித்தல், கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பிட வசதி உள்ளதா என பரிசோதித்து கழிப்பறை இல்லாத அனைவருக்கும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்கள் முழுவதும் சுகாதாரத்தை பேணி காக்கும் வழிமுறைகள் மற்றும் கொரோனாவில் இருந்து பொது மக்களை பாதுகாக்கும் விதமாக, கொரோனா பாதுகாப்பு முறைகள் குறித்து கிராம மக்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

Tags : Health Worker Training Camp , Health Worker Training Camp
× RELATED நெல்லை, தூத்துக்குடிக்கு சென்னையில்...