ராமேஸ்வரம்: ஆனி அமாவாசையை ஒட்டி ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தடையை மீறி குவிந்தனர். வெளி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி வருகின்றனர். தடையை மீறி சமூக இடைவெளியின்றி பக்தர்கள் குவிந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.