சென்னை: தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் அந்த்யோதயா சிறப்பு ரயில் மீண்டும் இயக்கப்பட்டதையடுத்து ரயில் பயணிகள் வரவேற்றுள்ளனர். தாம்பரம்- நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் அந்த்யோதயா ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு ரயில் பயணிகள் மற்றும் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.