சென்னை: ஒன்றிய அரசின் ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா படைப்பாளிகளின் சுதந்திரத்தை பறிக்கும் என்று ஃபெப்சி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட படத்தை மீண்டும் தணிக்கை செய்வது முறையல்ல. மக்களின் கருத்துக்களை பரிசீலிக்காத எந்த அரசும் நிலைத்ததில்லை என்று ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி குற்றம்சாட்டியுள்ளார்.