சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்க்க வேண்டும், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், அரசு அறிவிப்புகள் உள்ள சுவர்களில் சுவரொட்டி ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையை தூய்மையாக பராமரிக்க மக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.