பாரீஸ் : இந்தியாவுக்கு சொந்தமாக பிரான்சில் உள்ள 20 சொத்துகள் நீதிமன்ற உத்தரவால் முடக்கப்பட்டுள்ளது. ரூ. 12,700 கோடி வரி வசூல் வழக்கில் கெயர்ன் எனர்ஜி நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்து பாரீஸ் கோர்ட் உத்தவிட்டுள்ளது. இந்திய அரசுக்கும் கெயர்ன் எனர்ஜி நிறுவனத்துக்கும் இடையே வரி தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது.