×

துபாய் துறைமுகத்தில் சரக்கு கப்பல் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்ததால்,பரபரப்பு :2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுப்படுத்தப்பட்டது!!

துபாய் :துபாய் நாட்டில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு கப்பல் ஒன்று திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்ததால்,பரபரப்பு ஏற்பட்டது.துபாயில் உள்ள ஜெபல் அலி துறைமுகம் புகழ்பெற்ற ஒரு சரக்கு கப்பல் முனையமாகும். மத்திய கிழக்கு நாடுகளிலேயே மிகப்பெரிய துறைமுகமான இங்கு நிறுத்தப்பட்டு இருந்த ரசாயன பொருள் ஏற்றப்பட்டு இருந்த சரக்கு கப்பல் ஒன்று நேற்று இரவு திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது.

துரிதமாக செயல்பட்ட ஜெபல் அலி துறைமுக அதிகாரிகள், தீப்பற்றிய கப்பலில் இருந்த ஊழியர்கள் அனைவரையும் மீட்டனர்.பின்னர் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைக்கும் கப்பல் வரவழைக்கப்பட்டது. 2மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள் நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக தீ விபத்து ஏற்பட்ட கப்பல் துறைமுகத்தில் இருந்து நடுகடலுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஜெபல் அலி துறைமுக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.


Tags : Dubai , துபாய்
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...