சென்னை: மனித உரிமை போராளி ஸ்டேன் சுவாமி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூ.வீரபாண்டியன் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.