×

வேலைவாய்ப்பு முகாம் நடத்த கோரி கலெக்டரிடம் பாமக நிர்வாகி மனு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம், மாவட்ட கவுன்சிலரும் பாமக மாநில இளைஞரணி துணை செயலாளருமான இ.தினேஷ்குமார் அளித்துள்ள கோரிக்கை மனு: கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட எனது வார்டு பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான படித்த வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகள் உள்ளனர். இங்கு, பன்னாட்டு தொழிற்சாலைகளும், சிறு தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது. தற்போது, வெளி மாவட்டங்களில் இருந்து ஆட்கள் பணியமர்த்தப்பட்டு வேலை செய்து வருகின்றனர். ஆனால் எனது வார்டு பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள பட்டதாரிகளுக்கு வேலை வழங்க தொழிற்சாலைகள் மறுத்து வருகின்றன. எனவே எங்கள் பகுதி பட்டதாரிகளின் நலன் கருதி, தமிழக அரசின் மூலம் பன்னாட்டு தொழிற்சாலைகள் மற்றும் சிறு தொழிற்சாலைகளை அழைத்து மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வேலை ஏற்படுத்தி தருமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். மனுவை பெற்ற கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags : Pamaka ,Administrator ,Cory Collector , Pamaka administrator petitions the Collector seeking to hold an employment camp
× RELATED ஓவர் கான்பிடன்ஸ் வேணாம்..! தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்