சென்னை: ஒன்றிய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘தமிழகத்திற்கு ஒரு ஒன்றிய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம். நாடு அனைத்து துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்த சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்க வேண்டும். ஆனால் உள்கட்சி தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து நடந்திருக்கும் இந்த விரிவாக்கம் பாஜவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். நாட்டிற்கு இதனால் ஆகப்போவ
தென்ன?’ என்று காட்டமாக கேட்டுள்ளார்.