×

சார்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ24 லட்சம் தங்கம் பறிமுதல்: திருவாரூர் பயணி கைது

மீனம்பாக்கம்: சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.24.2 லட்சம் மதிப்புடைய 495 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, திருவாரூரை சேர்ந்த பயணியை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர். சார்ஜாவில் இருந்து ஏர்அரேபியா சிறப்பு விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது திருவாரூரை சேர்ந்த கலையரசன் கருணாநிதி (31) என்பவர், ‘என்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை’ என்று கூறி விட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றார.

அவர் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை மீண்டும் உள்ளே அழைத்து வந்து சோதனையிட்டனர். அவரது உள்ளாடைக்குள் 4 பிளாஸ்டிக் குப்பிகளை மறைத்து வைத்திருந்தார். அவைகளை எடுத்து திறந்து பார்த்தபோது, தங்க பேஸ்ட் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 495 கிராம். சர்வதேச மதிப்பு ரூ.24.2 லட்சம். இதையடுத்து கலையரசன் கருணாநிதியை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thiruvarur ,Sharjah , Thiruvarur passenger arrested for smuggling Rs 24 lakh worth of gold from Sharjah
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...