×

ஜேஇஇ 3வது, 4வது தேர்வுகள் ஜூலை 20 ஆகஸ்ட் 2ல் நடத்த முடிவு: ஒன்றிய அமைச்சர் பொக்ரியால் அறிவிப்பு

புதுடெல்லி: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ. நுழைவு தேர்வு தேசிய அளவிலான கூட்டு நுழைவுத் தேர்வாகும். ஆண்டுக்கு 4 முறை இத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இந்தாண்டுக்கான ஜேஇஇ 1வது மற்றும் 2வது முக்கிய தேர்வுகள் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்தது. அதன் பின்னர், நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக இதன் 3வது, 4வது தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.இந்நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ``ஜேஇஇ. 3வது தேர்வுகள் ஜூலை 20 முதல் 25, 4வது தேர்வு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை கொரோனா விதிகளை பின்பற்றி நடத்தப்படும்,’’ என்று தெரிவித்தார்.

Tags : JEE ,Union Minister ,Pokri , JEE, Minister of Examinations, Union By Pokri
× RELATED ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண்...