கோவை: கோவையை சேர்ந்த தமாகா கொள்கை பரப்பு செயலாளர் குல்பி தங்கராஜ் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,‘தமாகா தலைவர் ஜி.கே.வாசன், கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்து செயல்பட்டு வருகிறார். எனவே, கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். விரைவில், திமுகவில் இணைய உள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.