×

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தகோரி மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் போராட்டம்

திருச்சி: மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மனு கொடுக்க சென்ற விவசாயிகளை கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்க  போலீசார் மறுத்தனர். ஒரு சில விவசாயிகள், கேட் மீது ஏறி குதித்து உள்ளே செல்ல முயன்றனர். அப்போது அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.  இதையடுத்து கலெக்டர் அலுவலகம் அருகே விவசாயிகள் மண்டை ஓடுகளை கையில் ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் சிவராசு ஆகியோர் வெளியில் வந்தபோது விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து விவசாயிகளிடம் அமைச்சர்கள், கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக முதல்வர், நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் அனைவரும் கலைந்து செல்லும்படி அமைச்சர் கே.என்.நேரு கேட்டுக்கொண்டார். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Tags : Meghadau , Cloud, dam, farmers, struggle
× RELATED மேகதாது அணை விவகாரத்தில்...