×

ஊரடங்கு தளர்வுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்: மக்களுக்கு விஜயகாந்த் அறிவுரை

சென்னை:  தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செப்டம்பர் மாதத்தில் மிகப் பெரிய அளவில் உச்சம் பெறும் என கூறப்பட்டுள்ளதால், மக்கள் அனைவரும் தற்போதிருந்தே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அனைவரும் ஊரடங்கு தளர்வுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். மக்கள் அனைவரும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் கொரோனா என்ற கொடி அரக்கன் பிடியிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். நம்முடைய வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் ஊரடங்கு தளர்வுகளை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும். 3வது அலை மக்களை தாக்காமல் இருக்க அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே 3வது அலையிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

Tags : Vijaykanth , Curfew relaxation should be adhered to properly: Vijaykanth's advice to the people
× RELATED சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதைகள்...