×

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் நடிகையாக்குவதாக கூறி பள்ளி மாணவி பலாத்காரம்: திரைப்பட இயக்குநர் போக்சோ சட்டத்தில் கைது

சென்னை: பள்ளி மாணவியை, பெரிய நடிகையாக்குவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த திரைப்பட இயக்குநரை போலீசார் கைது செய்தனர். சென்னை வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் கே.கே.நகரை சேர்ந்த உஷா(42)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், எனது மகள் அருகில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கொரோனா என்பதால் ஆன்லைன் வகுப்பு மூலம் படித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் மதுரவாயல் ஸ்ரீகிருஷ்ணாநகர் 27வது தெருவை சேர்ந்த சத்யபிரகாஷ்(37) என்பவர் பழக்கம் ஆகியுள்ளார். சத்யபிரகாஷ் திரைப்பட இயக்குநராக உள்ளார்.

இன்ஸ்டாகிராம் நட்பு மூலம் சத்யபிரகாஷ் எனது மகளை சினிமாவில் அறிமுகம் செய்து பெரிய நடிகையாக ஆக்குவதாக கூறியுள்ளார். அதன்படி எனது மகளின் புகைப்படங்களை அவர் வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் சத்யபிரகாஷ் தனது வீட்டிற்கு அழைத்து சென்று நடிகையாக்குவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் எனது மகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே மகளை சீரழித்த சத்யபிரகாஷை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.

இந்த புகாரின் படி வடபழனி அனைத்து மகளிர் போலீசார் திரைப்பட இயக்குநர் சத்யபிரகாஷை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சத்தியபிரகாசுக்க திருமணம் ஆகி 7 வயதில் குழந்தை இருப்பதும், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்போது சமுதாயம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பள்ளி மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி எனது படத்தில் ஹிரோயின் வாய்ப்பு தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து வந்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் திரைப்பட இயக்குநர் சத்யபிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


Tags : Instagram ,Pokcho , Schoolgirl raped for allegedly practicing acting through Instagram: Film director arrested under Pokcho Act
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...