×

கர்நாடகாவுக்கு தாவர்சந்த் கெலாட் நியமனம் 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்

புதுடெல்லி:  கர்நாடகா உட்பட 8 மாநிலங்களுக்கு புதிதாக ஆளுநர்களை நியமனம் செய்தும், ஆளுநர்களை மாற்றியும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், கர்நாடகா, மிசோரம், மத்தியப் பிரதேசம், இமாச்சல பிரதேசம், கோவா, திரிபுரா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமனம் செய்தும், ஆளுநர்களை மாற்றியும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இதன்டி, ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சரான தாவர்சந்த் கெலாட், கர்நாடகா மாநில ஆளுநரான நியமிக்கப்பட்டு உள்ளார். மிசோரம் மாநிலத்தின் புதிய ஆளுநராக அரிபாபு கம்பாம்பதி, மத்தியப் பிரதேசத்தின் ஆளுநராக மங்குபாய் சகன்பாய் படேல்,  இமாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல், மிசோரம் ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை கோவா மாநிலத்துக்கும், அரியானா ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா திரிபுரா மாநில ஆளுநராகவும்,  திரிபுரா ஆளுநர் ரமேஷ் பையாஸ் ஜார்கண்ட் ஆளுநராகவும், இமாச்சலப் பிரதேச ஆளுநர் பண்ணாரு தட்டாட்ரயா அரியானா ஆளுநராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.


Tags : Gelat ,Karnataka , Tawarchand Kelad appointed new governors for 8 states
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!