×

தூத்துக்குடியில் கோயில்கள் திறப்பால் பூக்கள் விலை உயர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கோயில்கள் திறக்கப்பட்டதால் பூக்களின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வாக கோயில்கள், தேவாலயங்கள் திறக்கப்பட்டுள்ளது. நாளை முகூர்த்த தினம் என்பதால் பூக்களின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. மல்லிகை மற்றும் பிச்சிப்பூ விலை கிலோ ரூ.300க்கும் செண்டு பூக்கள் ரூ.80க்கும் விற்பனையாகின. பட்டு ரோஜா கிலோ ரூ.180க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Thoothukudi , flower, market, price
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...