×

தமிழகத்தில் இன்று சேலம், தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பெரம்பலூர், அரியலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகை மாவட்டங்களில் கனமழைக்கு  வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வெப்பச் சலனம் காரணமாக பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் நாளை தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர் ,பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் வேலூர் ,திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் ,வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வருகின்ற 9 மற்றும் 10-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ,திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்குள் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வருகின்ற இன்று தேதி முதல் 10ம் தேதி வரை மேற்கு வங்க கடல், குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகள், கேரளா ,கர்நாடக கடலோரப் பகுதிகள்,லட்சத் தீவு பகுதி ,தென்மேற்கு ,மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் இந்த தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Salem ,Dharamapuri ,Tamil Nadu ,Meteorological Survey Center , Heavy rain likely in 10 districts including Salem and Dharmapuri in Tamil Nadu today: Meteorological Department
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...