சென்னை: தமிழகத்தில் தற்போது கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் அளித்துள்ளார். தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் நாளை டெல்லி பயணம் செய்ய உள்ளனர். தமிழகத்துக்கு போதிய கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கும்படி கோரிக்கை வைப்பதற்காக டெல்லி பயணம் மேற்கொள்கின்றனர்.