×

கொறநாடு குட்டையை சீரமைக்க கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஒத்தவாடை குறுக்குத் தெருவில் உள்ள 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கொறநாடு குட்டையில் முன்பெல்லாம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வது வழக்கம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி கொறநாடு குட்டை செடி, கொடிகள் முளைத்து, குப்பை கொட்டப்பட்டு துர்நாற்றத்துடன் பாழடைந்து கிடக்கிறது.மேலும், இக்குட்டையில் தேங்கியுள்ள கழிவுநீரினால் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி, அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகளை ஏற்படுத்தியதால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் இந்த குட்டையை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதையடுத்து கொறநாட்டு குட்டையை பார்வையிட்ட எம்எல்ஏ பாலாஜி, தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். 


Tags : Koranadu pond , Request to rehabilitate Koranadu pond
× RELATED கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ₹110...