×

தமிழக சட்டப்பேரவையில் காகிதமில்லா இ-பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டம் : சபாநாயகர் அப்பாவு பேட்டி

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் காகிதமில்லா இ-பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.சென்னை தலைமை செயலகத்தில் சட்டசபையில் காகிதம் இல்லாத மின்னணு பட்ஜெட்டை தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி உள்ளிட்டோர் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, காகிதம் இல்லாத மின்னணு பட்ஜெட்டை தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. கால மாற்றத்திற்கு ஏற்ப இது போன்ற மின்னணு பட்ஜெட்டை கொண்டு வர வேண்டும் என பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இ – பட்ஜெட் குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.விரைவில் நல்ல முடிவு வரும்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சருடன் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. அப்போது அவர், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மின்னணு பட்ஜெட் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளும் வகையில் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதன்படி நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும், என்றும் தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,Legislative Assembly ,Speaker ,Appavu , சபாநாயகர் அப்பாவு
× RELATED 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாமக தனி அணி:...