×

சாதி மறுப்பு திருமணம் - இளைஞருக்கு அரிவாள் வெட்டு

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூரில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரை பெண்ணின் உறவினர்கள் வெட்டினர். கரடிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஆறுமுகத்தை அரிவாளால் வெட்டிய பெண்ணின் உறவினர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழுமலை என்பவரிடம் ஓட்டுநராக பணிபுரிந்த நிலையில் அவரது மகளை ஜூன் 10ல் ஆறுமுகம் திருமணம் செய்தார். ஆறுமுகத்தை காரில் கடத்தி வெட்டிய பெண்ணின் சித்தப்பா பழனி, தாய்மாமன் பார்த்திபன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Caste , crime
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...