×

பாம்பன் பாலத்தின் பராமரிப்பு பணியால் முக்கிய ரயில் சேவையில் மாற்றம்!: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

குமரி: பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக ராமேஸ்வரம் சிறப்பு ரயில் உள்பட முக்கிய ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது. பாம்பன் ரயில் பாலத்தில் கடந்த ஜூன் 28ம் தேதி சென்சாரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இந்த பாலத்தில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.  தற்போது, ரயில்கள் அனைத்தும் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. சென்சாரை சரி செய்யும் பணியில் சென்னை ஐஐடி குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தின் விவரம் பின்வருமாறு...

* பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மண்டபம் - ராமேஸ்வரம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

* மண்டபம் - ராமேஸ்வரம் இடையே ஜூலை 14ம் தேதி வரை ரயில்கள் இயக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

* சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில், மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

* மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்துக்கு பதில் மண்டபத்தில் இருந்து ரயில் புறப்பட்டு சென்னை எழும்பூர் செல்லும்.

* திருச்சியில் இருந்து செல்லும் சிறப்பு ரயில் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags : Bomben Bridge , Pamban Bridge, Maintenance Work, Rail Service, Southern Railway
× RELATED பராமரிப்பு பணிகளுக்காக பாம்பன் பாலத்தில் அடுத்த 67 நாள் ரயில் சேவை கட்