திருவனந்தபுரம்: கேரளத்தின் குருவாயூர் கோயிலின் மூத்த யானையான வலிய மாதவன்குட்டி(61) உடல்நலக் குறைவால் மரணம் அடைந்துள்ளது. குருவாயூர் கேசவன் யானையுடன் வலிய மாதவன்குட்டி பல ஆண்டுகளுக்கு முன் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. கம்பீரமான தோற்றம் கொண்ட மாதவன்குட்டி யானை பலமுறை குருவாயூர் கிருஷ்ணன் சிலையை சுமந்து சென்றுள்ளது.