×

கொரோனா பாதித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா மறைவு

ரிஷிகேஷ்: நாட்டின் பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரான சுந்தர்லால் பகுகுணா கொரோனா சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு வயது 94. சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆதாரமான காடுகளை பாதுகாக்கும் வகையிலான சிப்கோ இயக்கத்தை உருவாக்கியவர் சுந்தர்லால் பகுகுணா(94).  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 8ம் தேதி ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ‘பகுகுணாவின் மறைவு நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பாகும்’ பிரதமர் மோடியும், ‘பகுகுணாவின் மறைவு உத்தரகாண்ட்டுக்கும், நாட்டிற்கும் மட்டுமின்றி உலகிற்கே மிகப்பெரிய இழப்பு’ என உத்தரகாண்ட் முதல்வர் தீரத்தும் இரங்கல் தெரிவித்துள்ளனர். …

The post கொரோனா பாதித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா மறைவு appeared first on Dinakaran.

Tags : Sundarlal Bahuguna ,Rishikesh ,Corona ,
× RELATED அமேதியில் போட்டியா?.. ராபர்ட் வத்ரா ரிஷிகேஷில் வழிபாடு