×

கொரோனாவின் எந்த அலையையும் தாங்கும் வல்லமை இந்த அரசுக்கு உள்ளது; கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனாவின் எந்த அலையையும் தாங்கும் வல்லமை இந்த அரசுக்கு உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாக பின்பற்றினால் கொரோனாவின் எந்த அலையும் உள்ளே வரமுடியாது என கூறினார். கொரோனா பெருந் தொற்றில் இருந்து மீண்டு வருகிறோம், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது எனவும் தெரிவித்தார். மருத்துவர்களின் அர்பப்பணிப்பு, மாநில மருத்துவ கட்டமைப்பு, துடிப்பான நிர்வாகம் காரணமாக தொற்று குறைந்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள்., பூங்காக்கள் திறக்கவில்லை என கூறினார். மக்களின் வாழ்வாதாரத்தின் மீதள்ள அக்கறை காரணமாக அலுவலங்கள், உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

மக்களின் வாழ்வாரதாரம், பொருளாதார சுணக்கத்தின் காரணமாகவே தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என கூறினார். தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை ஒன்றிய அரசு முழுமையாக தரவில்லை என கூறினார். கொரோனாவை வெல்ல தடுப்பூசிதான் மிகப்பெரிய ஆயுதம், கேடயம் ஆகும் என பேசினார். தடுப்பூசி செலுத்துவதை மக்கள் இயக்கமாக மாற்ற தமிழக அரசு தயாராக உள்ளது என தெரிவித்தார். பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது கூட்டம் மகுந்த இடத்திலும் டபுள் மாஸ்க் பயன்படுத்துங்கள் என கூறினார். நோய் தொற்று அறிகுறி தெரிந்தால் மருத்துவமனை செல்ல வேண்டும், நீங்களாகவே சிகிச்சை எடுக்காதீர்கள் என அறிவுரை வழங்கினார்.

Tags : Chief Minister ,BC ,Q. Stalin , Corona, Chief Minister MK Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...